காஞ்சிபுரத்தில் உழவுத்தொழிலில் உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாட்டப்படது. பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுவது மட்டுமல்லாது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
எனவே, விவசாயிகள் பொங்கல் பண்டிகையை தங்களுக்கான பண்டிகையாக கருதி கொண்டாடிவருகின்றனர். பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவது தமிழர் மரபாக இருந்துவருகிறது.
விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் மாடுகளை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அங்கே, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணமிட்டு கயிறுகளை மாற்றி வெகு விமர்சையாக மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அருகில் உள்ள கம்மா கரைக்கு ஒட்டி சென்று மாடுகளைக் குளிப்பாட்டி, வாங்கி வந்த வண்ண வண்ண கயிறுகளையும், கழுத்து சலங்கை மணிகள் கட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல அலங்கரித்தனர்.
கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித் தேர் உற்சவம்..
செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News