முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்..

காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

Kanchipuram News : காஞ்சிபுரத்தில் உள்ள யதோத்தகாரி பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் 3வது நாளில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் உள்ள யதோத்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் 3வது நாளில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸத்ய விரத ஷேத்திரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், திருவெஃகா பெரிய பெருமாள் என அழைக்கப்படும், ஸ்ரீகோமளவள்ளி நாயிகா சமேத ஸ்ரீயதோத்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

யதோத்தகாரி பெருமாள் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 3வது நாளில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீயதோத்தகாரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி மஞ்சள் பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை பூ மாலைகள் அணிவித்து கருட வாகனத்தில் எழுந்தருள செய்து துப, தீப, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

பெருமாள் கோவிலில் கருட சேவை

இதைத்தொடர்ந்து பெரிய திருவடி எனும் கருட வாகனத்தில் ஸ்ரீயதோத்த காரி பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க வேதபாராயணம் ஓலிக்க, பஜனை கோஷ்டியினர் ஆடி பாடி வர, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு “கோவிந்தா, கோவிந்தா” என கோஷமிட்டு பெருமாளை வணங்கி பக்தியுடன் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News