முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவடி புறப்பாடு வீதியுலா உற்சவம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவடி புறப்பாடு வீதியுலா உற்சவம்..!

X
திருவடி

திருவடி கோவிலுக்கு செல்லும் வரதராஜ பெருமாள் 

Kanchipuram Varatharaja Perumal Temple : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் அமாவாசையையொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

சித்திரை மாத அமாவாசையையொட்டி வெண்பட்டு உடுத்தி பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி, பூதேவி உடன் காஞ்சி வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை மாதம் அமாவாசையை ஒட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. அதன்படி, அத்திகிரி மலை மீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, வெண்பட்டாடை உடுத்தி, திருவாபரணங்கள், பஞ்சவர்ண பூ மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார். ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News