தை மாதம் ஏகாதசி திதியை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வெண்பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, கனகாம்பரம் பூ சம்பங்கி பூ மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி,பூதேவி உடன் வீதி உலா வந்த வரதராஜ பெருமாள்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏகாதசி திதியை யொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, வெண்பட்டு உடுத்தி நவரத்தின, தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, கனகாம்பரம் பூ, சம்பங்கி பூ, மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள், சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் திருக்கோவிலுக்கு திரும்பினார்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News, Temple