முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் தான் பெஸ்ட்..! மாவட்ட போலீஸ் எஸ்.பி பெருமிதப்பட்டது இதற்கு தான்..

காஞ்சிபுரம் தான் பெஸ்ட்..! மாவட்ட போலீஸ் எஸ்.பி பெருமிதப்பட்டது இதற்கு தான்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

Kanchipuram News : காஞ்சிபுரத்தின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துரைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அடுத்த கீழ் கதிர்பூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் 7ம் ஆண்டு விழா மற்றும் உணவு திருவிழா நம்ம ஊரு நம்ம சுவை என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர்எம் சுதாகர் பங்கேற்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “காஞ்சிபுரம் பல்வேறு மன்னர்களின் தலைநகரமாகவும், குறிப்பாக சோழ, பல்லவ, கிருஷ்ணதேவராயர் காலங்களில் காஞ்சி தலைநகரமாக விளங்கியது. கல்வி, கலை, ஓவியங்களுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது. கல்வி கற்க வேண்டும் என்றால் அக்காலத்தில் காஞ்சிக்கு சென்று தான் கல்வி கற்றதாக வரலாறு உண்டு. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகரில் பல்வேறு கல்விக் கூடங்கள் உள்ளன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தன்னார்வலர்களும், பல்வேறு தொழில் புரிவோர்களும் கல்வியில் நாட்டம் கொண்டு பல்வேறு கல்விக்கூடங்களை அமைத்து கல்வி கற்பிப்பது சிறப்பு வாய்ந்தவை” என தெரிவித்தார்.

மேலும், மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவம் பயின்றதால், உணவைப் பற்றிய பல்வேறு கருத்துகளையும் உணவை அளவோடு உட்கொண்டால் கலோரிகளாக மனித உடலில் சீரான இயக்கத்தை உண்டாக்கும் என்றும் அளவுக்கு மீறினால் அவையே கொழுப்புகளாக மாறி பல்வேறு வியாதிகளுக்கு உட்படும் என்ற குறிப்புகளையும் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் எடுத்துரைத்தார். சரியான உணவு செரிமானத்திற்கு கார்போஹைட்ரேட், புரோட்டின் சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என எடுத்துரைத்தார். இவற்றைப் பற்றி குழந்தைகள் தெரிந்து கொண்டால் தான் வளரும் பருவத்தில் வளர்ச்சியும் புரிதலையும் உண்டாக்கும் என கூறினார்.

இதையடுத்து உணவு திருவிழாவில் கொங்கு நாடு, பல்லவ நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என 4 பிரிவின் கீழ் 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள், பள்ளி மாணவர்களாலும், அவர்களது பெற்றோர்களாலும், தயாரித்த வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அறுசுவை மிக்க உணவுகளையும் எஸ்.பி உண்டு மகிழ்ந்தார். பள்ளி மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வெகுவாக பாராட்டினார்.

First published:

Tags: Kanchipuram, Local News