முகப்பு /காஞ்சிபுரம் /

RRR திட்ட முறையில் சீரமைப்பு.. காஞ்சிபுரம் மாகறல் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி தொடக்கம்!

RRR திட்ட முறையில் சீரமைப்பு.. காஞ்சிபுரம் மாகறல் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி தொடக்கம்!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாகறல் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி தொடக்கம்

Kanchipuram Magaral Lake : காஞ்சிபுரம் மாகறல் ஏரி ரூ.2.69 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கியது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாகறல் ஏரி ரூ.2.69 கோடி மதிப்பில், புணரமைத்து கரைகள் பலப்படுத்துதல், வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகறல் ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் முறைபடுத்தப்படாத ஏரியாகும். இந்த ஏரிக்கும் செய்யாற்றின் மூலம் நீர்வரத்துப்பெறுகிறது. 3 மதகுகளுடன் சுமார் 266 ஏக்கர் பரப்பளவுடைய இந்த ஏரியின் மூலம் சுமார் 497ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த கனமழையினால் கரைகளில் அரிப்பு ஏற்பட்டு ஏரிக்கரைகள் பலவீனமாக உள்ளன. மதகுகளும் சேதமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மாகறல் ஏரியின் ஏரிக்கரைகளை அகலப்படுத்தி பலபடுத்துதல், கரையை உயர்த்துதல், மதகுகளை சீரமைத்தல், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு ₹2.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாகறல் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி தொடக்கம்

இதையும் படிங்க : ஒவ்வொரு வீட்டிலும் குருவிக்கூடு..! சிட்டுக்குருவியை பாதுகாக்கும் கரிசல்பட்டி கிராம மக்கள்..!

 இதனைத்தொடர்ந்து பழுதுபார்த்தல் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் (RRR SCHEME) திட்டத்தின் கீழ் ரூபாய் ₹2.69கோடி மதிப்பில் ஏரியில் மேற்கொள்ளப்படும் ஏரிக்கரைகளை பலபடுத்துதல், சீரமைத்தல், நீர் வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் நீர் உள்வாங்கியை மீளகட்டுதல் உள்ளிட்ட பணிகளை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பணிகளை மழைக்காலம் முன்பே விரைவாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்வில் ஒன்றிய குழு துணைத்தலைவர் திவ்யபிரியா இளமது, ஒன்றிய செயலாளர் குமணன், செயற்பொறியாளர் நீள்முடியான், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Kancheepuram, Local News