காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாகறல் ஏரி ரூ.2.69 கோடி மதிப்பில், புணரமைத்து கரைகள் பலப்படுத்துதல், வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகறல் ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் முறைபடுத்தப்படாத ஏரியாகும். இந்த ஏரிக்கும் செய்யாற்றின் மூலம் நீர்வரத்துப்பெறுகிறது. 3 மதகுகளுடன் சுமார் 266 ஏக்கர் பரப்பளவுடைய இந்த ஏரியின் மூலம் சுமார் 497ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த கனமழையினால் கரைகளில் அரிப்பு ஏற்பட்டு ஏரிக்கரைகள் பலவீனமாக உள்ளன. மதகுகளும் சேதமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மாகறல் ஏரியின் ஏரிக்கரைகளை அகலப்படுத்தி பலபடுத்துதல், கரையை உயர்த்துதல், மதகுகளை சீரமைத்தல், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு ₹2.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News