முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்- ஏலவார் குழலி அம்மன் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்- ஏலவார் குழலி அம்மன் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

X
பங்குனி

பங்குனி உத்திரத் திருக்கல்யாண வைபவம் 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்- ஏலவார் குழலி அம்மன் பங்குனி உத்திர திருக்கல்யாணம் பெருவிழா அதிகாலை நேரத்தில் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்- ஏலவார் குழலி அம்மன் பங்குனி உத்திர திருக்கல்யாணம் பெருவிழா அதிகாலை நேரத்தில் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும், காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஶ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி 11ஆம் நாள் திருவிழாவில், அதிகாலை ஏகாம்பரநாதர் சுவாமிக்கும், ஏலவார்க் குழலி அம்மனுக்கும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஏலவார்குழலி அம்மனுக்கும், ஏகாம்பரநாதர் சுவாமிக்கும், அபிஷேக ஆராதனைகள் செய்து, மல்லிகைப்பூ, ரோஜா பூ, மனோரஞ்சிதப்பூ, குருவி வேர், ஏலக்காய், மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் மணமக்களாக மாற்றி ஆயிரம் கால் மண்டபத்தின் மேலே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, கோயில் அர்ச்சகர்கள் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய, ஏலவார் குழலி அம்மனுக்கு ஏகாம்பரநாதர் சுவாமி மாலை மாலை மாற்றி அணிவித்து கொண்டு, மாங்கல்யத்தை கட்டும் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதிகாலை நேரத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News