முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி ஏகாம்பரநாதர் பூத வாகனத்தில் வீதி உலா.. பங்குனி உத்திரம் 3ம் நாள் உற்சவம்..

காஞ்சி ஏகாம்பரநாதர் பூத வாகனத்தில் வீதி உலா.. பங்குனி உத்திரம் 3ம் நாள் உற்சவம்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் / Kanchipuram Ekambaranathar Temple

Kanchipuram Ekambaranathar Temple | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் மூன்றாம் நாளில் பூத வாகனத்தில் ஏகாம்பரநாதர் வீதி உலா வந்தார்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் 3ம் நாளில் பூத வாகனத்தில் ஏகாம்பரநாதர் வீதி உலா வந்தார்.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் மூன்றாம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மல்லிகை பூ, ரோஜாப்பூ, மலர் மாலைகள் சூட்டி, திருவாபரணங்கள் அணிவித்து பூத வாகனத்தில் ஏகாம்பரநாதரும், சப்பரத்தில் ஏலவார்குழலி அம்மனும் எழுந்தருள செய்து மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.

பூத வாகனத்தில் ஏகாம்பரநாதர் வீதி உலா

இந்த உற்சவத்தில் விநாயகர், சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பின்தொடர்ந்து வர ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    திருவீதி உலா உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிநெடிகளும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Kancheepuram, Local News