முகப்பு /காஞ்சிபுரம் /

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம்.. காஞ்சிபுரத்தில் நாளை குறைதீர் கூட்டம் நடக்குது..

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம்.. காஞ்சிபுரத்தில் நாளை குறைதீர் கூட்டம் நடக்குது..

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

Kancheepuram District News : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு பொது விநியோகத்திட்ட குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீர் கூட்டம் ஜூன் 10 -ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.  ”காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 10.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கிளார், உத்திரமேரூர் வட்டத்தில் பென்னலூர்,வாலாஜாபாத் வட்டத்தில் ஏகனாம்பேட்டை, திருப்பெரும்புதூர் வட்டத்தில் வல்லக்கோட்டை, குன்றத்தூர் வட்டத்தில் எழிச்சூர் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்டகுறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு /மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kancheepuram, Kanchipuram, Local News, Ration card