முகப்பு /காஞ்சிபுரம் /

ரூ.98 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சிபுரத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்!

ரூ.98 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சிபுரத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்!

X
மாநகராட்சி

மாநகராட்சி அதிகாரிகள்

Kanchipuram | காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்கும் ரயில்வே சாலையில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக 45 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 30 கடைக்காரர்கள் வாடகை செலுத்தி வரும் நிலையில், 15 கடைகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி சுமார் 98 லட்ச ரூபாய்க்கு மேல் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நிலுவை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாடகை வசூலை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், ரயில்வே சாலையில் வாடகை செலுத்தாமல் நிலுவையில் உள்ள 15 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டு, நகரமைப்பு அலுவலர் தாமோதரன் தலைமையில் வருவாய் அலுவலர் தமிழரசன், நகர அமைப்பு ஆய்வாளர் சியாமளா, மற்றும் நகராட்சி அதிகாரிகளை அனுப்பி வைத்தனர்.

அதன்படி, வாடகை நிலுவையில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கத் தொடங்கியதால், கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ரயில்வே சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் ரயில்வே சாலையில் குவிக்கப்பட்டனர்.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கடை உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாடகை செலுத்த கால அவகாசம் அளித்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News