ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்த்தி சிறப்பு ஊட்டச்சத்தினை வழங்கி தொடங்கி திட்டத்தை வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் 940 மையங்களில் உள்ள 0 முதல் 6 மாதத்திற்கு உட்பட்ட 413 குழந்தைகளுக்கும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 1,086 குழந்தைகளுக்கும் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் ஊட்டச்சத்து வழங்கி குழந்தைகளாக ஆரோக்கியமாக வளர்த்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News