முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் மனுநீதி நாள் முகாம்- 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

காஞ்சியில் மனுநீதி நாள் முகாம்- 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

X
காஞ்சி

காஞ்சி ஆட்சியர்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா முன்னிலையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கலந்து கொண்டார். மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 02 தேதி முதல் 08 தேதி வரை வருவாய் கோட்டாட்சியர் முகாமிட்டு பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.

அதனை முறையாக பரிசீலித்து ஆய்வு செய்து, பெறப்பட்ட மனுக்களில் மாற்றுதிறனாளி நலத்துறை மூலம் சிறப்பு சக்கர நாற்காலி 1 நபருக்கும், வருவாய்துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 53 நபர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான நத்தம் வீட்டுமனைப் பட்டா 61 நபர்களுக்கும், குடும்ப அட்டை 25 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சிதுறை மூலம் மகளிர் சுயஉதவி வங்கிக் கடன் 2 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் விலையில்லா இலவச தையல் இயந்திரம் 3 நபர்களுக்கும், தொழில்துறை மூலம் தொழில்கடன் 5 நபர்களுக்கும், தாட்கோ துறை மூலம் திருமண உதவி மற்றும் கல்வி உதவி 4 நபர்களுக்கும், வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும், தோட்டகலைத்துறை மூலம் சொட்டுநீர் பாசனம் நாற்றுகள் மற்றும் விதைகள் 4 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன், சுயஉதவிக்குழு கடன் 8 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் 10 நபர்களுக்கும் என மொத்தம் 181 பயனாளிகளுக்கு 93.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழுத் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, வாலாஜாபாத் வட்டாட்சியர் சுபப்ரியா, தனி வட்டாட்சியர் ரமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News