காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அறியப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கோடை காலத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவம் தொடங்கியது.
வசந்த உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, வெண்பட்டு ஆடை உடுத்தி, திருவாபரணங்கள் அணிவித்து மல்லிகைப்பூ, மனோரஞ்சிதப்பூ, மலர் மாலைகள் சூட்டி, ஸ்ரீதேவி பூதேவியுடன், மேளதாளங்கள் ஒலிக்க, சன்னதி வீதியில் உலா வந்து,திருவடி கோவிலில் சேவை சாதித்தார்.
பின்னர், கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாளுக்கு வேத பாராயண கோஷ்டியினர் பாட வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு தூப, தீப ஆராதனை செய்து வசந்த உற்சவம் நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மல்லிகைப்பூ மனோரஞ்சித பூ சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News