முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு உற்சவம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு உற்சவம்!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

Kanchipuram Varadharaja Perumal Temple : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கே, சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு இரட்டைப் புறப்பாடு உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது.

இதனால், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிகப்பு கறை பச்சை நிற பட்டு உடுத்தி, மல்லிகை பூ, செண்பகப்பூ, பஞ்ச வர்ண பூ, மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு உற்சவம்

பின்னர், வெள்ளிக் கிழமையில் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பெருந்தேவி தாயாருடன் இணைந்து, மேள தாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டினர் பாடிவர, வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் உலா வந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த இரட்டை புறப்பாடு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News