முகப்பு /காஞ்சிபுரம் /

ஜல் ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை சிறப்பித்த காஞ்சிபுரம் கலெக்டர்!

ஜல் ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை சிறப்பித்த காஞ்சிபுரம் கலெக்டர்!

X
வட்டார

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சான்றிதழ் வழங்கும் ஆட்சியர் 

Kanchipuram News : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து  நிலை அலுவலர்களை சிறப்பிக்கும் நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தில் 2020-2021ம் ஆண்டு ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தி குறித்த காலத்தில் 100% திட்ட இலக்கினை அடைந்ததற்காக நல் ஆளுமைக்கான விருதினை பாரத பிரதமரால் தேசிய குடிமை பணி தினத்தன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை அலுவலர்களை சிறப்பிக்கும் நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அலுவலர்களை சிறப்பித்த காஞ்சிபுரம் கலெக்டர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் மாவட்ட அளவிலான பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News