சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதற்காக காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 10 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள காற்றாலைக்கு இறக்கை ஏற்றிச்சென்ற 40 அடி நீளம் கொண்ட கனரக லாரி, காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் அருகே புதியதாக கட்டப்படும் மேம்பால வளைவுகளை கடந்தபோது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஏறி இறங்கியது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் வலது - இடது புறங்களில் ஒரு புறம் லாரியின் முன்பக்கமும், மறுபக்கம் லாரியின் பின்பக்கமும் மாட்டிக் கொண்டது. இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News