முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்!

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்!

X
சிறப்பு

சிறப்பு பட்டிமன்றம்

Kanchipuram District | காஞ்சிபுரத்தில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் அரசுப் பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானதா போதுமானது இல்லையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் அரசுப் பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானதா போதுமானது இல்லையா என்ற தலைப்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றபெற்ற டிசம்பர் 27 1956ஆம் ஆண்டை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் கணிணித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திடுதலை வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், அமைப்புகளுடனான கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழி திட்ட விளக்கக்கூட்டம் மற்றம் விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெறுகின்றன.

இதில் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், ஆட்சிமொழி சட்டம் வார விழாவை முன்னிட்டு ஆட்சிமொழி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் அரசுப் பணியாளரகள் காட்டும் ஆர்வம் போதுமானதா போதுமானது இல்லையா என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகள் பேச்சாளர்களாக கலந்து கொண்டு சிறப்பான முறையில் உரையாற்றினர். இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த்துறை தலைவர் நஜ்மா, கல்லூரி முதல்வர் மலர்விழி மற்றும் உதவி பேராசிரியர் பிரபா, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News