முகப்பு /காஞ்சிபுரம் /

பங்குனி உத்திர திருக்கல்யாண விழா: சந்திர பிரபை வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் திருவீதி உலா!

பங்குனி உத்திர திருக்கல்யாண விழா: சந்திர பிரபை வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் திருவீதி உலா!

X
சந்திர

சந்திர பிரபை வாகனத்தில் ஏகாம்பரநாதர் 

Kanchipuram District | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளில், ஏகாம்பரநாதர் சந்திர பிரபை வாகனத்திலும், ஏலவார் குழலி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளில், ஏகாம்பரநாதர் சந்திர பிரபை வாகனத்திலும், ஏலவார் குழலி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாள் இரவு உற்சவத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மல்லிகை பூ, ரோஜாப்பூ, மனோரஞ்சிதம் பூ மலர் மாலைகள் சூட்டி, திருவாபரணங்கள் அணிவித்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் ஏகாம்பரநாதரும், அன்ன வாகனத்தில் ஏலவார்குழலி அம்மனும் எழுந்தருள செய்து, மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

திருவீதி உலா உற்சவத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பின்தொடர்ந்து வர ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்தனர்.

திருவீதி உலா உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிநெடிகளும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News