முகப்பு /காஞ்சிபுரம் /

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்.. காஞ்சிபுரத்தில் நடைபெற்றது..

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்.. காஞ்சிபுரத்தில் நடைபெற்றது..

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

Kanchipuram News : காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குழந்தை பாதுகாப்பு குழு கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பதை தவிர்க்க பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க விழிப்புணர்வு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.

இதேபோல, பெண் குழந்தை சிசு கருக்கலைப்பு தடுக்க விழிப்புணர்வு, குழந்தைகள் பள்ளியில் விடுபடாமல் சேர்த்தல், ஆதார் பதிவு செய்தல் தடுப்பூசி முறையாக செலுத்துதல், போதைப் பொருள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க : நள்ளிரவில் 10 ஜோடிகளுக்கு ஜோராக நடந்த சமத்துவ திருமணம்... ஒரு ஜோடிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை!

top videos

    இந்த கூட்டத்திற்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் களப்பணி அலுவலர் சுசீலா முந்நிலை வகித்தார். இதில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எழில், கிராம நிர்வாக அலுவலர் ஹேமலமா, அங்கன்வாடி ஆசிரியர்கள் பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News