முகப்பு /காஞ்சிபுரம் /

மது பாட்டில்களை மாலையாக அணிந்து மனு அளிக்க வந்த பாஜகவினர் - காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மது பாட்டில்களை மாலையாக அணிந்து மனு அளிக்க வந்த பாஜகவினர் - காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மது பாட்டில்களுடன் பா.ஜ.கவினர்

மது பாட்டில்களுடன் பா.ஜ.கவினர்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் மதுபான பாட்டில்களை மாலையாக அணிந்துகொண்டு பா.ஜ.கவினர் ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

கழுத்தில் மதுபான பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு மதுபான கடையை மூடக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பாஜக-வினரால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சித்ரகுப்தருக்கென தனிகோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கிளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த பிரசித்தி பெற்ற சித்ரகுப்தர் கோவில் அருகே அரசு மதுபானக் கடையை இயங்கி வருகிறது. கோவிலுக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையால் புனித தன்மை சீர்குலைந்து அசுத்தம் ஏற்பட்டு வருவதால் பக்தர்களும் அப்பகுதி மக்களும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இதுவரை அந்த மதுபானக் கடை அகற்றப்படாமல் இருக்கும் சூழ்நிலையில் தினந்தோறும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆகையால் இந்த மதுபானக் கடையை அகற்ற பாரதிய ஜனதா கட்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பட்டு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் டாஸ்மார்க் கடை முன்பு பந்தல் அமைத்து சிவ வாத்தியம் முழங்க சிவனடியார்கள் அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

ஏரி சீரமைப்பு பணிகளில் முறைகேடு... காஞ்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அப்போது பாஜகவினர் கழுத்தில் காலி பாட்டில்களை மாலை போல் அணிவிந்துகொண்டு நூதன முறையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் அனுமதி கோரி மனு வழங்கினார்.

First published:

Tags: Kanchipuram, Local News