முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / கல்லூரி மாணவனை நண்பர்களே கொன்று வனப்பகுதியில் புதைத்த கொடூரம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கல்லூரி மாணவனை நண்பர்களே கொன்று வனப்பகுதியில் புதைத்த கொடூரம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

Kallakurichi murder | முன்விரோதம் காரணமாக ஊராட்சிமன்ற தலைவரின் மகனை மது பாட்டிலால் குத்தி கொன்று வனப்பகுதியில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

தியாகதுருகம் அருகே முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற துணை தலைவரின் மகனை  நண்பர்கள் சேர்ந்து  கொலை செய்து வனப்பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள கூத்தக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர். இவரது மகன் ஜெகன் கடலூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கல்லூரிக்கு செல்லாமல்  வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜெகனை காணவில்லை என வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெகன்ஸ்ரீ-யின் தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரது நண்பர்களான ஐயப்பன் உட்பட நான்கு பேரின் தொலைபேசி எண்ணும் இருந்துள்ளது. இதனால் ஐயப்பன் உட்பட நான்கு பேர் மீது சந்தேகமடைந்த வரஞ்சரம் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஐயப்பன் என்பவருக்கும் ஜெகன்ஸ்ரீ-க்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதற்காக ஐயப்பன் உட்பட நான்கு பேரும் ஜெகன் ஸ்ரீ-யை அழைத்து கொண்டு கூத்தக்குடி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஜெகன்ஸ்ரீ-க்கு மது போதை அதிகமான நிலையில் ஐயப்பன் உட்பட நான்கு பேரும் சேர்ந்து ஜெகன் ஸ்ரீ-யை பாட்டிலால் குத்தி கொலை செய்து வனப்பகுதியிலேயே  புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து கூத்தக்குடி வனப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் புதைக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்து  பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ஜெகன் ஸ்ரீ-யின் நண்பர்களான ஐயப்பன் உள்ளிட்ட நான்கு பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார்த்திகை  தீபத்தின் போது கார்த்தி என்பவர் நெருப்பு சுற்றும் போது , அந்த நெருப்பு ஜெகன் மீது பட்டதில் ஏற்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கத்துடன் நட்பாக பேசி அழைத்து சென்று கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

top videos

    செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.

    First published:

    Tags: Crime News, Kallakurichi, Murder