முகப்பு /செய்தி /உலகம் / தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை: வழிபாடுகளில் கவனம் செலுத்தும் இளைஞர்கள்

தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை: வழிபாடுகளில் கவனம் செலுத்தும் இளைஞர்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

கோவிலுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட தற்போது 310 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக சுற்றுலா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதால், வழிபாட்டு தலங்களில் இளைஞர்கள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது.

சீனாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பொருளாதார நிலை சற்று மந்தநிலையில் காணப்படுகிறது. குறிப்பாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி அந்நாட்டில் பட்டதாரிகளை விட முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வேலை கிடைக்காத காரணத்தால், அந்நாட்டு இளைஞர்கள் பெரும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மனதை அமைதிப்படுத்த சீன இளைஞர்கள் வழிபாட்டு தலங்களில் அதிக அளவு குவிந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கோவிலுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட தற்போது 310 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக சுற்றுலா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: China, Unemployment