இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் தன் மீதான குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது, டொமினிக் ராப் துணை பிரதமராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகும், டொமினிக் துணை பிரதமராக நீடித்தார். மேலும் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பும் டொமினிக்கிற்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அமைச்சரவை முன்னாள் ஊழியர்களை டொமினிக் மிரட்டியதாக புகார் எழுந்தது.
இதையும் படிங்க; மனைவியால் மீண்டும் சிக்கலில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்…!
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட போதே, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தான் பதவி விலகுவதாக டொமினிக் அறிவித்திருந்தார். அதற்கு ஏற்ப, அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டொம்னிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, Rishi Sunak