முகப்பு /செய்தி /உலகம் / தாக்கப்போகும் சூரியப்புயல்.. 2 நாட்களுக்கு உஷார்... நாசா கொடுத்த பகீர் எச்சரிக்கை

தாக்கப்போகும் சூரியப்புயல்.. 2 நாட்களுக்கு உஷார்... நாசா கொடுத்த பகீர் எச்சரிக்கை

சூரிய புயல்

சூரிய புயல்

ஒரு பெரிய காந்த வெடிப்பு நிகழும்போது இது நிகழ்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்னும் இரண்டு நாட்களில் சூரியன் பிரகாசமாக இருக்கும் என்றும், அதிக வெயிலின் தாக்கம் மற்றும் வெப்பக் காற்று வெளியாகும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.

சூரியப் புயல் ஏப்ரல் 24-ஆம் தேதி பூமியைத் தாக்கும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி இன்னும் வலுவான வெப்பம் ஏற்படும் என்று நாசா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்போது, ​​மக்கள் கூடுமானவரை வெளியில் செல்லவேண்டாம் என்றும், அதிகளவு தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

விளைவு

சூரியனால் வெளியிடப்படும் வெப்பமான காற்று மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. வெளியாகும் கதிர்வீச்சு ரேடியோ தகவல்தொடர்புகளில் தலையிடக்கூடும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

சூரிய புயல்கள் எவ்வாறு உருவாகின்றன?

ஒரு பெரிய காந்த வெடிப்பு நிகழும்போது இது நிகழ்கிறது. இந்த புயல்கள் இணையம் முதல் ஆற்றல் வரை ஒவ்வொரு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்பையும் பாதிக்கின்றன. மேலும் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆற்றலும் இவற்றிடம் உண்டு.

நாசாவின் எச்சரிக்கை

2025 ஆம் ஆண்டில் சூரிய சக்தியின் அதிகபட்ச அளவை நெருங்கும் போது சூரிய நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரிக்கும். மேலும் இது பூமியில் உள்ள நமது வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பத்தையும், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்களையும் பாதிக்கும் என்று நாசா எச்சரித்ததுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: NASA