பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களான கோதுமை, அரிசி கிடைப்பதிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கராச்சியில் ரமலான் மாதத்தை ஒட்டி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவச கோதுமை வழங்கியது.
இதனை வாங்க அப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட பலர் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலில் மயங்கியவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவு வாங்க சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 21 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan News in Tamil