உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைப் பற்றி ஆயிரக்கணக்கான கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த பனி நிறைந்த சிகரங்கள் இரவில் ஒலி எழுப்புவது உங்களுக்குத் தெரியுமா? அந்த ஒலி மிகவும் சத்தமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு வரை அது கேட்கிறது.
எவரெஸ்ட் சிகரத்தில் 15 முறை ஏறி சாதனை படைத்த டேவ் ஹான், இரவு நேரத்தில் அங்கு வினோதமான சத்தம் கேட்கிறது என்று முதலில் சொன்னார். ”நாங்கள் ஓய்வெடுக்கும்போது, பள்ளத்தாக்கைச் சுற்றிலும் பனிப் பாறைகள் விழுவதைக் காண முடிந்தது. இந்த ஒலி மிகவும் பயங்கரமானது, தூங்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். முதன்முறையாக இதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதாக விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். இதைக் கேட்டால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.
சூரியன் இமயமலையில் மறையும் போது வெப்பநிலை விரைவாக குறையும். அப்போது எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றியுள்ள பனிப்பாறையில் ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. உயரமான பனிப்பாறைகள் உடைய தொடங்குகின்றன. மேலும் அவை உடைந்து சிதையும் போது, பயங்கரமான சத்தம் கேட்கிறது. விரைவான வீழ்ச்சி காரணமாக, ஒலி மிகவும் சத்தமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது. இது உயரமான பகுதிகளில் மட்டுமே நடக்கும், என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
பனிப்பாறை நிபுணர் எவ்ஜெனி பொடோல்ஸ்கி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு 2018-ல் பனிப்பாறையின் நில அதிர்வு செயல்பாட்டை ஆய்வு செய்தது. மூன்று வாரங்கள் விஞ்ஞானிகள் இந்த இமயமலைப் பகுதியில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அங்கு நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தனர். அங்கிருந்து வரும் குரல்களை பதிவு செய்தார்கள். ”ஒவ்வொரு குரலையும் தனித்தனியாக அறிய முயன்றோம். வெப்பம் வேகமாக குறைவதால் இது நிகழ்கிறது என்பது நில அதிர்வு தரவுகளை ஆய்வு செய்ததில் தெளிவாக இருந்தது” என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதாகவும், அதன் தாக்கம் இங்கும் காணப்படுவதாகவும் குழு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் ஆர்க்டிக் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் டாக்டர் பொடோல்ஸ்கி, நாங்கள் சுமார் 29,000 அடி உயரத்தில் இருந்ததால் இது ஒரு அற்புதமான அனுபவம் என்றார். அங்கு பணிபுரிவது நல்ல அனுபவம். நாங்கள் எவரெஸ்ட் சிகரத்தில் வாழ்ந்தோம், அங்கு சாப்பிட்டோம். இரவில் அங்கு வெப்பநிலை சுமார் -15°C அல்லது 5°F வரை குறைந்தவுடன், உச்சியில் இருந்து பயங்கரமான சத்தம் கேட்டது. நாங்கள் பார்த்தபோது, பனிப்பாறையில் விரிசல் ஏற்பட்டு, வெடித்தது.
பனிப்பாறைக்குள் ஆழமான அதிர்வுகளை அளவிட, நாங்கள் பனியின் மீது சென்சார்களை வைத்து ஒவ்வொரு கணமும் தகவலைப் பெற்றுக் கொண்டோம். இமயமலையில் உள்ள பனிப்பாறை பனிக்கட்டிகள் பேரழிவு விகிதத்தில் உருகி, மில்லியன் கணக்கான மக்களையும் தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள பரந்த பனிக்கட்டிகள் முந்தைய ஏழு நூற்றாண்டுகளை விட கடந்த 40 வருடங்களில் 10 மடங்கு வேகமாக சுருங்கிவிட்டன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mount Everest