முகப்பு /செய்தி /உலகம் / அடுத்த 10 ஆண்டுகளில் உலகை அச்சுறுத்தப்போகும் புதிய பெருந்தொற்று... எச்சரிக்கும் சர்வதேச ஆய்வு முடிவு!

அடுத்த 10 ஆண்டுகளில் உலகை அச்சுறுத்தப்போகும் புதிய பெருந்தொற்று... எச்சரிக்கும் சர்வதேச ஆய்வு முடிவு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அடுத்த பத்து ஆண்டுகளில் கோவிட்-19 போன்ற கொடிய தொற்றுநோய் ஏற்படுவதற்கு 27.5% வாய்ப்பு உள்ளது என சர்வதேச ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

  • Last Updated :
  • inter, IndiaLondonLondon

கோவிட்-19 பெருந்தொற்று பரவலானது மனித குலத்திற்கு வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு ஆண்டுகாலம் ஒட்டுமொத்த உலகத்தையே முடக்கி போட்ட இந்த பெருந்தொற்று ஒட்டுமொத்த சுகாதார அமைப்பிற்கே பெரும் சவாலாக அமைந்தது.

இந்நிலையில், எதிர்கால முன்னெச்சரிக்கை கருதி பெருந்தொற்று பரவல் குறித்து லண்டனை சேர்ந்த Airfinity Ltd என்ற நிறுவனம் ஆய்வு செய்து முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த தசாப்தத்தில் கோவிட்-19 போன்ற கொடிய தொற்றுநோய் ஏற்படுவதற்கு 27.5% வாய்ப்பு உள்ளது, ஏனெனில் சமீப காலமாக வைரஸ்கள் அடிக்கடி வெளிவருகின்றன என்றுள்ளது. விரைவான முறையில் தடுப்பூசிகள் பயன்படுத்துவதன் மூலம் பாதிப்புகளை குறைத்து இறப்புகளைக் குறைப்பதற்கான வாய்ப்புள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம், சர்வதேச பயணத்தின் வளர்ச்சி, அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் ஜூனோடிக் நோய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவை ஆபத்திற்கு பங்களிக்கின்றன. ஆனால் புதிய நோய்க்கிருமி பரவல் கண்டுபிடிக்கப்பட்ட 100 நாட்களுக்குப் பிறகு பயனுள்ள தடுப்பூசிகள் வெளியிடப்பட்டால், நிறுவனத்தின் மாடலிங் படி, கொடிய தொற்றுநோய் 8.1% ஆக குறைகிறது.

ஒரு மோசமான சூழலில் பறவைக் காய்ச்சல் வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து மனிதனுக்கு மனிதனுக்குப் பரவினால், அது பிரிட்டனில் ஒரே நாளில் 15,000 பேரைக் கொல்லக்கூடும் என்று ஏர்ஃபினிட்டி தெரிவித்துள்ளது.

உலக மக்கள் இப்போது கோவிட்-19 உடன் வாழ்ந்து வருவதால், அடுத்த சாத்தியமான உலகளாவிய பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு சுகாதார வல்லுநர்கள் தயாராகி தங்கள் கவனத்தைத் திருப்புகின்றனர். கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்கனவே SARS, MERS மற்றும் Covid-19 ஆகியவற்றை ஏற்படுத்தும் மூன்று முக்கிய கொரோனா வைரஸ்கள் மற்றும் 2009 இல் பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் தோன்றியுள்ளன.

இதையும் படிங்க: மெயில் முதல் வீடியோகால் வரை.. உலகத்தை சத்தமில்லாமல் அழிக்கும் இண்டர்நெட் உலகம்!

H5N1 பறவைக் காய்ச்சல் வேகமான பரவல் ஏற்கனவே கவலையை தருகிறது. இதுவரை ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதேவேளை, பறவைகளின் விகிதங்கள் மற்றும் பாலூட்டிகளின் ஊடுருவல் அதிகரிப்பு ஆகியவை விஞ்ஞானிகள் மற்றும் அரசுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இது வைரஸ் பரவுவதை எளிதாக்கும் வழியாக மாறலாம்.

top videos

    அபாயம் மிக்க MERS மற்றும் ஸிகா போன்ற வைரஸ்களுக்கு தடுப்பூசிகளோ முறையான மருத்துவமோ இல்லை. அதேபோல, தற்போதைய கண்காணிப்பு முறைகள் போதுமானதாக இல்லை. எனவே, தயார் நிலைக்கு வர வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு தெரிவிக்கிறது.

    First published:

    Tags: Covid-19, Pandemic