முகப்பு /செய்தி /உலகம் / 'யாரோ சீண்டுவது போல இருந்தது'.. ஹோட்டல் அறையில் தூங்கியவருக்கு நேர்ந்த கொடூரம்.. அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

'யாரோ சீண்டுவது போல இருந்தது'.. ஹோட்டல் அறையில் தூங்கியவருக்கு நேர்ந்த கொடூரம்.. அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

மாதிரிபடம்

மாதிரிபடம்

ஹோட்டல் அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • inter, Indiatennesseetennesseetennessee

பொதுவாக தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் தனியாக பெண்கள் தங்குவது தான் ஆபத்தாக கருதுவோம். அறைகளில் பாதுகாப்பான அம்சங்கள் உள்ளதா, ரகசிய கேமராக்கள் உள்ளதா போன்றவற்றை முறையாக செக் செய்து கொண்டு தான் விடுதிகளில் தங்க வேண்டும் என பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், அமெரிக்காவில் ஹோட்டல் அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் சவுத் ஹில்டன் என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த மார்ச் 30ஆம் தேதி நபர் தங்கியுள்ளார். இவர் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது, அதிகாலை 5 மணி அளவில் யாரோ மர்ம நபர் நுழைந்து தன்னை சீண்டுவது போல உணர்ந்துள்ளார்.

படுக்கை அருகே இருந்த விளக்கை ஆன் செய்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஹோட்டலின் மேலாளரான டேவிட் நீல் என்பவர் அறைக்குள் நுழைந்து அந்த நபரின் கால் விரல்களை வாயால் நக்கியுள்ளார். மேலாளர் டேவிட்டின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காவல்துறையிடம் புகார் அளிக்கவே, 52 வயதான மேலாளர் டேவிட் நீல் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: குதிரை சவாரியின்போது விபத்து.. 23 வயதான பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டியாளர் பரிதாப மரணம்!

இவர் நிர்வாகத்திடம் இருந்த கார்ட் சாவி போட்டு அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அறைக்குள் புகை வாசனை வந்தது போல தோன்றியதாகவும், வாடிக்கையாளர் பத்திரமாக இருக்கிறாரா என்று பார்க்கவே அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார் டேவிட் நீல். இருப்பினும், கைது செய்யப்பட்ட நபரை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

First published:

Tags: Viral News