முகப்பு /ஈரோடு /

ஈரோடு அருகே இப்படி ஒரு அருவி இருக்கா? கோடை காலத்தை கழிக்க சூப்பர் ஸ்பாட்!

ஈரோடு அருகே இப்படி ஒரு அருவி இருக்கா? கோடை காலத்தை கழிக்க சூப்பர் ஸ்பாட்!

X
ஈரோடு

ஈரோடு அணை

Erode kalingarayan dam | கோடைவெயில் நம்மை எல்லாம் வாட்டி வதைக்கும் இந்த சூடான கோடைகாலத்தை குளு குளுவென குளித்துக்கொண்டாடிட இந்த அணைக்கட்டு சூப்பர் ஸ்பாட்டாக இருக்கும்.

  • Last Updated :
  • Erode, India

குழந்தைகளுக்கு கோடைவிடுமுறை,அலுவலகம் செல்லுபவர்களுக்கு வார விடுமுறை என இளைப்பாறிக்கொள்ள ஒரு அழகான இடம் இவ்வளவு குட்டி அருவிகளை வேறெங்கும் நம்மால் பார்ப்பது என்பது அரிது.

ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காலிங்கராயன் அணைக்கட்டு. இது காவிரி ஆற்றின் துணை ஆறான பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஆகும்.இந்த அணைக்கட்டு கொங்குமண்டலத்தை ஆண்ட காலிங்கராயனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

கிபி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணையின் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருவதாக இந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பவானி ஆறு நொய்யல் ஆற்றுடன் கலக்கும் விதமாக இந்த அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அணைக்கட்டின் அழகே சிறிய சிறிய அருவிகள் போன்ற அடுக்கடுக்கான கட்டமைப்பும் அதில் வளைந்து வடிந்து வரும் நீரில் குளிக்கும் போது பெரியவர்களும் தங்கள் குழந்தைகளுடன் குழந்தையாக மாரி விளையாடுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Erode, Falls, Local News, Tourist spots