ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தீபா விபத்தில் சிக்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவளை மீட்டு ஆம்புலன்ஸில் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்க டாக்டர் உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும், ரத்தம் நிறைய வீணாகி இருப்பதாக சொல்ல தீபாவுடன் வந்தவர்கள் யாரும் உறவினர்கள் இல்லை என தெரிய வருகிறது.
மறுபக்கம் நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா அப்பா அபிராமியிடம் நட்சத்திராவுக்கு நகை எடுக்க போவதாக சொல்ல அதெல்லாம் வேண்டாம், ஏற்கனவே நிறைய நகைகள் வாங்கி வைத்திருப்பதாக கூட்டி போய் காட்ட இருவரம் மிரண்டு போகின்றனர். எப்படியாவது நகைகளை திருட வேண்டும் என திட்டமிடுகின்றனர்.
அடுத்து பெங்களூரில் கார்த்தி நட்சத்திரா காதலன் கதிரை பார்த்து விட கதிர் தப்பி ஓடி தீபா இருக்கும் மருத்துவமனையில் நுழைகிறான். பிறகு கார்த்தியும் அங்கு வந்து கதிரை தேட கதிர் காணாமல் போகிறான்.
அப்போது தீபாவுக்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுவதாக மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்க கார்த்தி எனக்கும் அதே பிளட் குரூப் தான் என தீபா என தெரியாமலேயே ரத்தம் தருகிறான். அடுத்து தீபாவின் உறவினர் என்ற முறையில் கையெழுத்து போட சொல்ல யாரும் முன்வராத நிலையில் கார்த்தி கணவன் என கையெழுத்து போடுகிறான்.
அடுத்து தீபாவை மருத்துவமனையில் பார்க்கும் கதிர் நட்சத்திராவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் சந்தோஷம் அடைகிறாள். உடனே அவளை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு பெங்களூர் கிளம்ப தயாராகிறாள். அடுத்து ஜானகி கார்த்திக்கு போன் செய்து தீபா பற்றி கேட்க எதையோ சொல்லி சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv