ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் மற்றும் ஜானகி என இருவரும் கார்த்தியை தனியாக அழைத்து சென்று இப்போ இருக்குற தர்மசங்கடமான சூழ்நிலையில் எதை சொன்னாலும் அது பொய்யாக தான் தெரியும், ஆனால் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொன்னார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் தீபாவை உங்க கிட்ட ஒப்படைச்சிட்டோம் அவளை நல்லபடியாக பார்த்துக்கோங்க என கார்த்தியின் காலில் விழுந்து விடுகிறார். மேலும் தீபா உங்களுக்காக எவ்வளவோ நல்லது பண்ணி இருக்காங்க, அப்படியிருக்கும் போது அவளா இப்படி பண்ணி இருப்பா? என பேசுகிறார்.
மறுபக்கம் ராஜ ஸ்ரீ தீபாவிடம் நீ எப்படியோ கார்த்தியை கல்யாணம் பண்ணிட்ட, எனக்கு அதை பத்தியெல்லாம் கவலையில்லை, ஆனால் நீ தொடர்ந்து என் பொண்ணுக்காக பாடணும், எனக்கு நீ சத்தியம் செய்து கொடுத்திருக்க, ஒருவேளை நீ வரலைனா உன் குடும்பத்தை சும்மா விட மாட்டேன் என மிரட்ட தீபா கண்டிப்பா நான் வந்து பாடறேன் என வாக்கு கொடுக்கிறாள்.
மேலும் நட்சத்திரா துரை மற்றும் கதிரை சந்தித்து கடைசி நேரத்துல நல்ல விசியம் பண்ணீங்க, ஆனால் எப்போ யார் கேட்டாலும் இதையே சொல்லி மெயின்டைன் பண்ணுங்க என சொல்ல துரை உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கு என்று சொல்ல நட்சத்திராவும் நானும் அப்படி தான் நினைக்கிறன் என சொல்லி துரையை கிளம்ப சொல்கிறாள். பிறகு கதிர் நட்சத்திராவிடம் ராஜஸ்ரீ கிட்ட இருக்க என்னுடைய போனை மட்டும் எப்படியாவது வாங்கிடணும் என சொல்கிறான்.
இதனைத்தொடர்ந்து எல்லாரும் அபிராமி வீட்டுக்கு கிளம்ப ரூபஸ்ரீ நாமும் அங்க போகலாம், அபிராமி தீபாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுறதை நான் பாக்கணும் என சொல்ல ராஜ ஸ்ரீ இப்போதைக்கு நாம் போகிறது சரியா இருக்காது. ஐஸ்வர்யா கிட்ட நடந்தது என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என சமாளிக்கிறாள்.
Also read... வா வா டியரு பிரதரு… சகோதரர்களின் பாசத்தை கொண்டாடும் தமிழ் பாடல்கள் ஒரு லிஸ்ட்!
அபிராமி வீட்டில் எல்லாரும் காத்திருக்க அபிராமி மட்டும் ரொம்ப ஆர்வத்துடன் இருக்க அருணாச்சலம் கொஞ்சம் பொறுமையா இரு என சொல்ல என் பையன் கார்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு வரான், எப்படி ஆர்வம் இல்லாமல் இருக்கும் என சொல்கிறாள். பிறகு கார் வர கார்த்திக் காரில் இருந்து இறங்க அபிராமி சந்தோசம் அடைய பின்னாடியே வந்த காரில் இருந்து தர்மலிங்கம் குடும்பம் இறங்க அதை பார்த்து குழப்பம் அடைகிறாள். இவங்க எதுக்கு இங்க வந்தாங்க என கேட்க கார்த்திக் நான் தீபா கழுத்தில் தான் தாலி கட்டினேன், நட்சித்திரா கழுத்தில் இல்லை என சொல்ல அபிராமி அதிர்ச்சியுடன் ஆரத்தி தட்டை கீழே தவற விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv