முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மயங்கி விழுந்த சிதம்பரம்... பதறிய குடும்பம் - பரபர கட்டத்துக்குள் நுழைந்த ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்!

மயங்கி விழுந்த சிதம்பரம்... பதறிய குடும்பம் - பரபர கட்டத்துக்குள் நுழைந்த ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதா சொன்ன வார்த்தை, செந்திலை வெளியே தள்ளிய இளங்கோ என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அன்னம் அமுதாவிடம் பேச அவள் அமைதியாக இருக்க வடிவேல் சைகையில் அவள் காலில் விழ சொல்ல, அன்னம் விழப்போக அப்போது செந்தில் வருகிறான்.

சிதம்பரம் மயங்கி விழுந்த விசயத்தை சொல்ல அமுதா பதறியபடி அங்கிருந்து கிளம்புகிறாள். இதனால் வடிவேல் தன்னுடைய திட்டம் சொதப்பியதாக வருத்தபடுகிறான்.

அதை தொடர்ந்து ஹாஸ்பிடலில் அப்பாவை ICU-வில் வைத்திருப்பதை பார்த்து அமுதா அழுகிறாள். மேலும் சிதம்பரம் வடிவேல் காலில் விழுந்ததால் மனமுடைந்து இப்படி ஆகிவிட்டார் என சொல்ல அதை கேட்டு இளங்கோ நாகு அதிர்ச்சியாகின்றனர்.

Also read... நடுரோட்டில் நின்ற புது கார்.. கடுப்பில் பணத்தை திருப்பிக் கேட்ட பிரபல கேமராமேன்!

ஹாஸ்பிடல் வெளியே அன்னம், மாணிக்கம், செந்தில் மூவரும் சிதம்பரத்தை பார்க்க உள்ளே நுழைய இளங்கோ கோபத்துடன் வருகிறான்.

எங்க அப்புச்சியை அவமானப்படுத்தி விட்டு இப்ப உசிரோட இருக்காரா இல்லையான்னு பார்க்க வந்தீங்களா மரியாதையா இங்கிருந்து கிளம்பிருங்க என செந்தில் உட்பட மூவரையும் பிடித்து வெளியே தள்ளுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv