முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எரிந்த நிலையில் கிடைத்த செந்திலின் துணிகள்... அதிர்ச்சியில் அமுதா குடும்பம் - அமுதாவும் அன்னலட்சுமியும்!

எரிந்த நிலையில் கிடைத்த செந்திலின் துணிகள்... அதிர்ச்சியில் அமுதா குடும்பம் - அமுதாவும் அன்னலட்சுமியும்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

எறிந்த நிலையில் செந்திலின் துணிகள், அமுதா குடும்பத்துக்கு பேரதிர்ச்சி, நடந்தது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அன்னம்,அமுதா இருவரும் செந்திலை எதிர்பார்த்து காத்திருக்க மாணிக்கம் மட்டும் தனியாக வீட்டுக்கு வருகிறார்.வீட்டுக்கு வந்த அவரிடம் செந்திலை பற்றி கேட்க அவர் இன்னும் அவன் வரவில்லையா என அதிர்ச்சியாகிறார்

இந்த சமயத்தில் வடிவேல் வீட்டிற்கு வர அன்னம் செந்தில் எங்கே என கேட்டு அவனை அடிக்கிறாள். அதன் பிறகு வடிவேல் பழனியிடம் வந்து செந்திலை காணவில்லை நீ எதும் அவனை செய்துவிட்டாய என கேட்க, அதற்கு பழனி கோபப்பட்டு அவனை மிரட்டி அனுப்புகிறான்.

மறுபக்கம் வீட்டில் எல்லாரும் செந்திலை காணாமல் அனைவரும் கவலையுடன் உட்கார்ந்து இருக்க, அப்போது போலீஸ் வீட்டுக்கு வந்து எரிந்த நிலையில் ஒரு சடலம் இருப்பதாக சொல்லி கூட்டி செல்கிறார்கள்.

அங்கு செந்திலின் சட்டை, பேண்ட் எரிந்த நிலையில் கிடக்கிறது அதை பார்த்து அமுதா, அன்னம்,மாணிக்கம் மூவரும் கதறி அழுகின்றனர். சம்பவ இடத்தில கூட்டம் கூடுகிறது.

Also read... மாற்றப்பட்டதா நாவல் கதை? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பொன்னியின் செல்வன் 2.? திரை விமர்சனம் இதோ!

இந்த விசியம் சிதம்பரம் வீட்டிற்கும் தெரிய வர புவனா, செல்வா கதறி அழுதபடி அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர். இளங்கோ சிதம்பரத்தை கூப்பிட அவர் அவளா தேடிக்கொண்ட வாழ்க்கை என வர மறுக்கிறார், ஆனால் அனைவரும் சென்றபின் தனியாக உட்கார்ந்து அழுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv