முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செந்திலை கத்தியால் குத்திய பழனி... அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

செந்திலை கத்தியால் குத்திய பழனி... அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

சந்தோஷத்தில் இருக்கு அமுதாவுக்கும் அன்னத்திற்கும் காத்திருந்த அதிர்ச்சி, செந்திலுக்கு கத்தி குத்து என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தேர்வில் பாஸான செந்திலுக்கு B.ED காலேஜில் சீட்டு கிடைக்க அதை சந்தோஷமாக அமுதாவுக்கு போன் பண்ணி சொல்கிறான். அதை கேட்ட அமுதா காதலுடன் தனக்கு மல்லிகை பூ வாங்கி வர வேண்டும் என சொல்கிறாள்.

இதனால் செந்தில் ஸ்வீட் வாங்கிக்கொண்டு மாணிக்கத்துடன் வரும்போது, தீபாவுக்கு இந்த சந்தோஷமான விசயத்தை சொல்லி விட்டு வருகிறேன் என மாணிக்கத்தை விட்டு விட்டு கிளம்புகிறான்.

அதன் பிறகு செந்தில் தீபா வீட்டுகு வந்து பார்க்க அங்கு வீடு பூட்டியிருக்கிறது. பிறகு செந்தில் வீட்டுக்கு சந்தோஷமாக திரும்பி வந்து கொண்டிருக்க பழனி தன் ஆட்களுடன் வந்து செந்திலிடம் சண்டையிட, அப்போது நடக்கும் சண்டையில் செந்திலை கத்தியால் குத்துகிறான் பழனி. செந்தில் மயங்கி விழுகிறான்.

Also read... விஜய்யுடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா... வைரலாகும் வீடியோ!

இந்த விஷயம் தெரியாமல் அன்னம், அமுதா இருவரும்  செந்திலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv