முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அன்னம் போட்ட கண்டிஷனால் அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அன்னம் போட்ட கண்டிஷனால் அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

வடிவேலு கொடுத்த அடுத்த அதிர்ச்சி, அன்னம் போட்ட கண்டிஷனால் அமுதா எடுத்த முடிவு என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வராஜ் அறைக்குள் சென்று வடிவேலுவை அடி வெளுக்க அவன் செல்வராஜிடம் நான் பண்ணதை வெளில சொன்னீங்கன்னா உண்மையாவே விஷம் குடிச்சி செத்துருவேன்.. உங்க பேரப் பிள்ளை அனாதையா ஆயிரும் என மிரட்டுகிறான்.

இதனால் செல்வராஜ் வெளியே வந்து வடிவேலு பிழைத்து விட்டதாக சொல்ல அன்னம் அமுதாவிடம் என் பையன் உயிர் போயி வந்திருக்கு, அவனுக்கு கேண்டீன் காண்டராக்டை குடுத்தே ஆக வேண்டும் என சொல்கிறாள்.

Also read... டோவினோவின் 2018 என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப் ரிலீஸானது!

செல்வராஜிடம் அமுதா என்ன செய்ய என கேக்க, அவர் பதவி, பொறுப்பு பற்றி சொல்லி, உனக்கு எது நியாயமா படுதோ அதை செய்யும்மா என சொல்கிறார். மறுநாள் காலையில் அமுதா ஸ்கூல் கிளம்ப, அன்னம் கேண்டீன் பற்றி கேக்க, அமுதா முடியாது என மறுக்கிறாள்.

இதனால் சுமதி அமுதா அவளது அண்ணனுக்கு அந்த காண்ட்ராக்டை குடுத்துவிட்டதாக சொல்ல அன்னலட்சுமி அதை கேட்டு அப்செட் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv