முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செந்திலை விடுதலை செய்த நீதிபதி... அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

செந்திலை விடுதலை செய்த நீதிபதி... அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

செந்திலை விடுதலை செய்த நீதிபதி, சிதம்பரத்தை வீட்டை விட்டு துரத்திய பழனி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டுக்கு வரும் போலீஸ் செந்திலிடம் கொஸ்டின் கொடுக்க அதை வாங்கும் செந்தில் கோர்டில் அனைவரின் முன்பு உட்கார்ந்து பரிட்சை எழுதுகிறான். அதை பார்த்து அன்னம் அமுதா மாணிக்கம் ஃபீல் பண்ணுகின்றனர்.

அதற்கு அடுத்ததாக கோர்ட்டுக்கு வரும் செல்வராஜ் தன் ஆட்களுடன் செந்தில் மேல் பொய் சாட்சி சொன்ன ரவுடிகளை கொண்டுவந்து கோர்ட்டில் நிறுத்துகிறார்.

ஜட்ஜ் அதை புரிந்து கொண்டு, நீ எந்த சாட்சியையும் கொண்டுவர வேணாம், ஒரு குடும்பம் படிக்கிறதுக்காக இவ்வளோ போராடுதுனா அந்த குடும்பத்து பையன் தவறான பாதையில போயிருக்க மாட்டான், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது, அதனால அவனை நான் ரிலீஸ் பண்ணுறேன் என சொல்கிறார்.

பிறகு இறந்தவர் ஒருவனின் வீட்டிற்கு அமுதா வர அங்கு கூட்டம் கூடியிருக்கிறது. அங்கே இருக்கும் இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தையுடன் அழுது கொண்டிருக்க, அமுதா அவளுக்கு ஆறுதல் சொல்ல வர, சுற்றி இருப்பவர்கள் உங்கப்பா வட்டி கேட்டு பண்ண கொடுமையிலதான் அவன் தற்கொலை செய்து கொண்டதாக அவளை திட்டி விடுகிறார்கள். அப்புச்சி இதுவரை இப்படி பண்ணியது இல்லை ஏன் இப்படி செய்தார் என கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அமுதா அங்கிருந்து கிளம்புகிறாள்.

சிதம்பரம் பழனியிடம் நம்ம பைனான்சில் பணம் வட்டிக்கு வாங்கி இன்னை ஒரு ஆள் தற்கொலை பண்ணி இறந்துருக்காரு, நாம இப்படி இதுவரைக்கும் வட்டி அதிகப்படுத்தி யாரையும் கஷ்டப்படுத்தியது இல்ல, நம்மகிட்ட பணம் வாங்கி நல்லாதான் இருந்துருக்காங்க இதென்ன கொடுமை என சிதம்பரம் கோபப்பட்டு கத்துகிறார்.

Also read... பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்!

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி பழனி இது எல்லாம் இப்ப என்னோடது. வீட்டை விட்டு வெளியே போங்க என விரட்டுகிறான்.

அமுதா வந்து அப்புச்சியை வெளியே போக சொன்ன விசயம் தெரிந்து உமாவிடம் சண்டையிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv