முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

தான் சபரிமலைக்கு சென்று வந்து விட்டதாக சொல்ல அமுதாவுக்கு எலக்‌ஷன் வேலை எல்லாம் பார்க்கனும்ல அதான் 48 நாள் விரதத்தை 4 நாள்ல முடித்துவிட்டேன் என சொல்கிறான்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா நாமினேஷன் தாக்கல் செய்ய பழனி, உமா அதிர்ச்சி அடைகின்றனர். பழனி நிர்வாகத்திடம் அமுதா கையெழுத்தா அல்லது கைநாட்டான்னு கேட்டு சொல்லுங்க என நக்கலடிக்க அமுதா பழனியிடம் எனக்கு கதிரேசன் மாமா ஆசிர்வாதம் இருக்கு, நான் ஜெயிக்குறதுக்கு அது ஒண்ணு போதும் என பதிலடி கொடுக்கிறாள்.

அடுத்து சிதம்பரத்தை செந்திலும் அமுதாவும் சந்திக்க செந்தில் சிதம்பரத்திடம் என்னை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், ஒரு உதவி வேணும் என கேட்க குமரேசன் குடும்பம் பள்ளிக் கூடத்தை அபகரிக்க முயற்சி பண்றாங்க.. அமுதா கரஸ் பதவிக்கு போட்டி போடுறா , நீங்க அவளுக்கு ஆதரவு குடுக்கனும் என கேட்கிறான்.

மேலும் நான் அந்த ஸ்கூல்ல மெம்பரா இருக்கேன், ஆனா அவங்க நடந்துக்குற விதம் எனக்கு பிடிக்காததுனால நான் எதுலயுமே கலந்துக்குறது கிடையாது என சொல்ல, ஒரு ஓட்டால அது கெட்டவங்க கைக்கு போயிடக் கூடாது என செந்தில் சொல்லிவிட்டு நகர்கிறான்.

அதன் பிறகு மாணிக்கம் அன்னலட்சுமியிடம் மாப்பிள்ளை எங்க ரெண்டு நாளா ஆளைக் காணோம் என கேக்க, செந்தில் இருமுடி கட்டுடன் வருகிறான்.

தான் சபரிமலைக்கு சென்று வந்து விட்டதாக சொல்ல அமுதாவுக்கு எலக்‌ஷன் வேலை எல்லாம் பார்க்கனும்ல அதான் 48 நாள் விரதத்தை 4 நாள்ல முடித்துவிட்டேன் என சொல்கிறான்.

அதோடு விரதம் முடிஞ்சது முதலிரவுக்கான ஏற்பாட்டை பண்ணுமாறு சொல்கிறான். அடுத்து செந்தில் அமுதா அருகே வர, அவள் சாமியே சரணம் ஐயப்பா என நகர்கிறாள்.

செந்தில் அவளிடம் மாலையை கழட்டி வச்சிட்டு சாமியா இருந்த நான் ஆசாமியா வர்றேன் என சொல்லி செந்தில் சாமி முன் மாலையை கழற்றி வைக்கிறான்‌.

Also read... வாடி என் கருப்பட்டி பாத்தா பத்தும் தீப்பெட்டி... நடிகை அதிதி சங்கரின் ரீசென்ட் க்ளிக்ஸ்

அப்போது அன்னம் பழனி மலை முருகனுக்கு அரோகரா என சொல்ல, செந்தில் முழிக்க, மாணிக்கம் உன் கழுத்துல பாரு, முருகனுக்கு மாலை போட்டாச்சு என சொல்ல, செந்தில் பார்க்க, அவனுக்கு பழனிமலை செல்வதற்கான மாலை போடப்பட்டு இருக்கிறது.

இதனால் செந்தில் ஷாக்காக அமுதா அவனை பார்த்து புன்னகைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv