முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நான் எழுத்தாளர், நீ தான் வார்த்தை... ரேஷ்மாவுக்கு ரொமாண்டிக் வாழ்த்து சொன்ன மதன்!

நான் எழுத்தாளர், நீ தான் வார்த்தை... ரேஷ்மாவுக்கு ரொமாண்டிக் வாழ்த்து சொன்ன மதன்!

ரேஷ்மா முரளிதரன்

ரேஷ்மா முரளிதரன்

பூவே பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய சீரியல்களில் ரேஷ்மாவும் மதனும் இணைந்து நடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு ரொமாண்டிக்கான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அவரது கணவரும், சீரியல் நடிகருமான மதன் பாண்டியன்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ரேஷ்மா மற்றும் மதன் முக்கியமானவர்கள். ரேஷ்மா முரளிதரன் நேற்று (ஏப்ரல் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவரது கணவர் மதன் பாண்டியன் படம் ஒன்றை வெளியிட்டு, “நான் எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் நீ தான் எப்போதும் வார்த்தைகள்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ‘நான் உருகிவிட்டேன்’ என கமெண்ட் செய்திருந்தார் ரேஷ்மா.

நவம்பர் 2021-ல் மதன் பாண்டியன் மற்றும் ரேஷ்மா முரளிதரன் இருவரும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வருகின்றனர்.

நடிகை ரேஷ்மா முரளிதரன், அபி டெய்லர், ஆபிஸ், பூவே பூச்சூடவா மற்றும் தென்றல் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். மதன் பாண்டியன் அவரின் சக நடிகராக இருந்தவர். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானவர் மதன் பாண்டியன். பூவே பூச்சூடவா, அபி டெய்லர் போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன், டான் ஆகிய படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published: