முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் சரத் பாபு மருத்துவமனையில் அனுமதி - வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்!

நடிகர் சரத் பாபு மருத்துவமனையில் அனுமதி - வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்!

சரத்பாபு

சரத்பாபு

சரத் பாபு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக வசந்த முல்லை என்ற படம் வெளியாகியிருந்தது. மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார். 72 வயதாகும் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரத் பாபு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Hospital