முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் விழாவில் திரிஷாவிடம் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்கள் - அவர் என்ன சொன்னார் தெரியுமா?

பொன்னியின் செல்வன் விழாவில் திரிஷாவிடம் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்கள் - அவர் என்ன சொன்னார் தெரியுமா?

திரிஷா - விஜய்

திரிஷா - விஜய்

பொன்னியின் செல்வன் ஆந்தம் வெளியீட்டு விழாவில் திரிஷாவிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் லியோ அப்டேட் கேட்டனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் Anthem பாடல் வெளியீட்டு விழா விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் கார்த்தி, விக்ரம் மற்றும் திரிஷா ஆகியோரிடம் அவர்களின் அடுத்த படங்களின் அப்டேட்டுகளை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டனர்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் ஆந்தம் பாடல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.  ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னணியில் நடைபெற்ற அந்த விழாவில், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தை பற்றியும், அதில் நடித்த அனுபவும் பற்றியும் மேடையில் பேசினார்.

அவரிடம் அங்கு இருந்த மாணவர்கள் கைதி-2 படத்தின் அப்டேட்டுகளை கேட்டனர். அதற்கு கைதி முதல் பாகத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை பேசி சூசகமான தகவலை கார்த்தி கொடுத்தார்.

top videos

    அதேபோல் நடிகர் விக்ரம் பேசுகையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டனர்.  அது தனக்கு கேட்காதது போல் ஜாலியாக சமாளித்தார் விக்ரம்.  இவர்களைப் போலவே நடிகை திரிஷாவிடம்,  தற்போது விஜயுடன் அவர் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் அப்டேட்டை மாணவர்கள் கேட்டனர்.  அதற்கு நடிகை திரிஷா அந்தப் படம் பற்றி பிறகு பேசுவோம் என கூறி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவத்தை கூறினார்.

    First published:

    Tags: Actress Trisha, Ponniyin selvan