முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’சிகரெட் அட்வைஸ்.. அண்ணாமலை டயலாக்..’ சரத்பாபு குறித்து உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்!

’சிகரெட் அட்வைஸ்.. அண்ணாமலை டயலாக்..’ சரத்பாபு குறித்து உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்!

ரஜினி

ரஜினி

Sarath babu : சரத்பாபு முன்னால் நான் எப்போதும் சிகரெட் பிடிப்பதில்லை என்று தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.  கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி சரத்பாபு நேற்று உயிரிழந்தார்.

72 வயதான நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரத்பாபுவின் உடல் நேற்று இரவு 8 சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் உள்ள தி. நகர் இல்லத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

Also read... நடிகர் சரத் பாபுவின் எவர்கிரீன் பாடல்கள் ஒரு லிஸ்ட்!

இந்நிலையில் சரத்பாபுவின் உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது,  ''சரத்பாபு நல்ல நண்பர். அவர் என்னுடன் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே மிக முக்கியமானது. முத்து, அண்ணாமலை எல்லாம் மிக முக்கியமான படங்கள். என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு மரியாதை இருக்கிறது. எப்போதும் நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து மிகவும் வருத்தப்படுவார்.

சிகரெட்டை பிடித்து உடலை கெடுத்து கொள்ள வேண்டாம், ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று சொல்லுவார். அவர் முன்னால் நான் எப்போதும் சிகரெட் பிடிப்பதில்லை. அண்ணாமலையில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பெரிய டயலாக்கை பேசுவதற்குள் பத்து பதினைந்து டேக் சென்று கொண்டிருக்கும் பொழுது சரியாக நடிக்க வராத போது அந்த எமோஷனை அவ்வளவு அழகாக நடித்துக் காட்டினார்'' என்று சரத்பாபு உடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார் நடிகர் ரஜினி.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Rajinikanth