பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை மக்களிடம் கொண்டும் சேர்க்கும் விதமாக டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் என படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னம், நடிகர் விக்ரம், நடிகை திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் திருச்சியில் நடைபெறும் பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி திருச்சி என்ஐடி கல்லூரியில் நடைபெறுகிறது. திருச்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
View this post on Instagram
இதையும் படிக்க | ரியா விஸ்வநாதனின் புதிய சீரியல் சண்டக்கோழி!
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்துக்கு மக்களிடையே ஆர்வம் குறைவாகவே இருந்துவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே படக்குழுவினரின் புரொமோஷன் நிகழ்ச்சி படத்துக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ponniyin selvan