முகப்பு /வேலைவாய்ப்பு /

விழுப்புரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.. யாரெல்லால் கலந்து கொள்ளலாம்?

விழுப்புரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.. யாரெல்லால் கலந்து கொள்ளலாம்?

மாதிரி படம்

மாதிரி படம்

Villupuram District News | வேலைவாய்ப்பு  தொழில்நெறி வழிகாட்டும் மையம மூலம் விழுப்புரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 21.04.2023 அன்றுதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெற விரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 2023ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று (21.04-2023) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ITI Diploma, BE/ B.Tech, Nursing Pharmacy போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் (BIO-DATA) இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

top videos
    First published:

    Tags: Job, Local News, Villupuram