முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி: ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி.. விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி: ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி.. விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் - டிஎன்பிஎஸ்சி தேர்வு

ராமதாஸ் - டிஎன்பிஎஸ்சி தேர்வு

மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது - ராமதாஸ் கேள்வி

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட நில அளவர் தேர்வில் முறைகேடு ஏதேனும் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் குறிப்பில் கூறியிருப்பதாவது:  ’தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட TNPSC  போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது.

வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

கட்டாயம் வாசிக்கமத்திய அரசில் 5,000 காலியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே... தேர்வில் சொல்லி அடிக்கலாம்..!

top videos

    நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    First published:

    Tags: Tamil Nadu Government Jobs