முகப்பு /செய்தி /கல்வி / பெற்றோரும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர்... 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நெகிழ்ச்சி

பெற்றோரும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர்... 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நெகிழ்ச்சி

நந்தினி

நந்தினி

Tamil Nadu 12th Board Results 2023: திண்டுக்கலில் படிக்கும் மாணவி 600/600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்.

இந்நிலையில் தேர்வு முடிவுகளை இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்

இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கி சாதனைபடைத்துள்ளார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

மேலும் இப்பள்ளி மாணவி நந்தினி ஒரே பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவந்துள்ளார். மேலும் இப்பள்ளியின் தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஊக்கமளித்ததாகவும் தனது வெற்றிக்கு தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.

நந்தினியின் தந்தை சரவணகுமார் தச்சு தொழிலாளியாக உள்ளார். நந்தினியின் அம்மா பாலபிரியா. நந்தினியின் சகோதரர் பிரவீன் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார்.

TN 12th Exam results : கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

தமிழகத்தில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தமிழத்தின் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தன்னுடைய வருங்கால கனவு ஆடிட்டிங் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

First published:

Tags: 12th Exam results