பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 % தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து திருப்பூர் 97.79, பெரம்பலூர்97.59 தேர்ச்சி விகிதம் உள்ளது.
அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6573 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இயற்பியல் ,வேதியியல் பாடங்களில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றவர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.
இதையும் படிக்க | Tamil Nadu 12th Result 2023 Live : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது : 94.03 சதவீதம் தேர்ச்சி விகிதம்
இயற்பியலில் 812 பேரும்வேதியலில் 3909 பேரும், உயிரியல் பாடத்தில் 1494 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பெரும், கணினி அறிவியல் பாடத்தில் 4618 பேரும், வணிகவியல் பாடத்தில் 5678 பேரும், பொருளியல் பாடத்தில் 1760 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4051 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியில் பாடத்தில் 1334 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் பாடத்தில் வெறும் 2 பேர் மட்டுமே நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ராணிப்பேட்டையை சேர்ந்த லக்ஷயா ஸ்ரீ மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி ஆகிய இருவர் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதில் லக்ஷயா ஸ்ரீ ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்தவர். நந்தினி திண்டுக்கல்லில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்றவர். இரண்டு பேரும் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.