முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வு... தமிழ்நாடு பாடத் திட்டத்தில் இருந்து 80%க்கும் அதிகமான கேள்விகள்... முழு விவரம்..!

நீட் தேர்வு... தமிழ்நாடு பாடத் திட்டத்தில் இருந்து 80%க்கும் அதிகமான கேள்விகள்... முழு விவரம்..!

நீட் தேர்வு

நீட் தேர்வு

Neet Exam | நீட் தேர்வில் வேதியியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளில் 34 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நீட் தேர்வில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 200 கேள்விகளில் 165 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. மாணவர்கள் கூறும்போது, இயற்பியல், வேதியியல் பாடத்திற்கான கேள்விகள் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் விலங்கியல் , தாவரவியல் பாடத்திற்கான கேள்விகள் எளிதாக இருந்தாக கூறினர்.

இந்த நிலையில் நீட் தேர்வில் 11, 12ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்பட்டதோடு, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல், ஆகிய 4 பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றன. ஒவ்வொரு பாடத்திலிருந்து 50 கேள்விகள் என்ற அடிப்படையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுள் மாணவர்கள் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

20 கேள்விகளை விருப்பத்திற்கு ஏற்ப (Choice-ல்) விடலாம். அந்த வகையில் தமிழக பாடத்திட்டத்திலிருந்து 165 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், 35 கேள்விகள் என்சிஇஆர்டி பாடப்புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. வேதியியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 34 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மீதமுள்ள 16 கேள்விகள் என்சிஆர்டி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டன.

இயற்பியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 50 கேள்விகளும் மாநில பாடத்திட்டத்திலிருந்து இடம் பெற்றன. தாவரவியல் பாடத்தில் இருந்து 50 கேள்விகளில் 42 கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்திலும், 8 கேள்விகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றிருந்தன.

இதையும் வாசிக்க10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது...? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

விலங்கியல் பாடத்தில் 50 கேள்விகளில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 39 கேள்விகளும், என்சிஆர்டி பாடத்திட்டத்திலிருந்து 11 கேள்வியும் கேட்கப்பட்டன. அந்த வகையில் நீட் நுழைவுத் தேர்வில் 165 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன. எனவே தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகத்தை படித்தாலே நீட் தேர்வினை எளிதில் எழுதி வெற்றிப் பெற முடியும் என்ற நிலை உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Neet Exam