முகப்பு /செய்தி /கல்வி / சிவகங்கையில் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம்பிடித்து சாதித்த ஆட்டோ ஓட்டுநர் மகள்...

சிவகங்கையில் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம்பிடித்து சாதித்த ஆட்டோ ஓட்டுநர் மகள்...

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

கணிதம், அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியாவது தனது விருப்பம் என்று மாணவி இலக்கியா தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil nadu, India

மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுனரின் மகள் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 493 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் இடம்பிடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீயூ வசந்த நகரில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ‌விஜயக்குமார், ஜெகதா தம்பதியினர் மகள் இலக்கியா. மானாமதுரை அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 500க்கு 493மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்தில்  அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 98,   ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 97  என ஒட்டுமொத்தமாக 493 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதை கொண்டாடும் விதமாக பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு மாணவியின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இனிப்புகள் வழங்கி கொடுத்து கொண்டாடினார்.

இதையும் வாசிக்க10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இலக்கியா, " கணிதம், அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வியில் வேளாண்மை படிக்க விரும்புவதாகவும், ஐஏஎஸ் அதிகாரியாவது தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: 10th Exam, 10th Exam Result