முகப்பு /செய்தி /கல்வி / 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ல் முழு ஆண்டுத் தேர்வு

6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ல் முழு ஆண்டுத் தேர்வு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 1- 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடந்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் 1 முதல் 3 ம்வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21- ஆம்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4 முதல் 9 -ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் 28 தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும். தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Exam, School students