சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 1- 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடந்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் 1 முதல் 3 ம்வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21- ஆம்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4 முதல் 9 -ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் 28 தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும். தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Exam, School students