பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்த நிலையில், மாணவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகள் குழப்பமாக இருந்ததால், அக்கேள்விகளுக்கு மாணவர்களால் முறையாக பதிலளிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதேபோன்று, 28வது கேள்வியும் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனை அடுத்து, ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகளுக்கும், இரு மதிப்பெண் பிரிவில் 28வது கேள்விக்கும் முழுமையாக மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையும் படிங்க; ஜப்பான்.. சிங்கப்பூர்.. முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின்!
வினாத்தாளை ஆய்வு செய்ததில், பிழை நேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 3 மதிப்பெண்ணும், 28வது கேள்விக்கு இரண்டு மதிப்பெண்ணும் என, 5 மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் எந்த விடையை எழுதியிருந்தாலும், 5 மதிப்பெண்கள் முழுமையாக வழங்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, Public exams